'பறவைகளுக்கும் கொஞ்சம் தண்ணீர் வைங்க ப்ளீஸ்!'
பறவைகள் பழங்காலந்தொட்டே மனிதர்களுடன் தொடர்பில் உள்ளவை.புறாக்கள் தகவல் தொடர்புகாக பயன்படுத்தப்பட்டது.காக்கை சமூக நல்லிணக்க குறியீடு ஆகும்.மேலும் காலையில் விழிக்கையில் காக்கை,மைனா, குயில் மற்றும் குருவிகளின் ரம்மிய குரலில் மயங்கி எழுகிறோம்.ஆனால் நாளடைவில் பறவைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.மேலும் கோடை காலங்களில் பறவைகள் நீரின்றி உணவின்றி சிரமப்படுகின்றன.கிரமங்களை விட நகரங்களில் உள்ள பறவைகள் அதிகம் பாதிக்கப்படுகிறது.நகர வாசிகள் ஆகிய நாம் நம்மால் இயன்றதை செய்ய முற்படுவோம்.நம் முன்னோர்கள் பறவைகளுக்கு உணவிடும் நற்பண்புகள் கொண்டுருந்தனர்.அமாவாசை மற்றும் விசேஷ நாட்களில் குறிப்பாக காக்கைக்கு உணவிடுவர்.அக்குறிப்பிட்ட நாட்களில் உணவிட்டாலே நன்மை ஏற்படும் என்பர்.நாம் அனைத்து நாட்களும் அவைகளுக்கு உணவு கிடைக்கும்படி செய்தால் அளவில்லாத நன்மை கிடைக்குமல்லவா!.மேலும் பறவைகள் தூய்மை பணியாளர்கள் ஆகவும் செயல்படுகிறது. நாம் தூக்கி எறியும் கழிவுகள் மற்றும் உயிரற்ற விலங்குகளின் உடல்கள் ஆகியவற்றை உண்டு சுத்தம் செய்கின்றது.மேலும் அவைகள் மரம் நடும் செயலையும் சிறப்பாக செய்...